Monday 17 August 2015

பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெய்-விஞ்ஞானிகள் வெற்றி

 Apr 25, 2013
ஒரு வகை பாக்டீரியாவிலிருந்து டீசல்எண்ணெய்யைத் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் பரீட்சார்த்த அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இவ்விதம் புது வழியில் தயாரிக்கப்பட்ட செயற்கை டீசலுக்கும் வழக்கமாக பெட்ரோலிய குரூட் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் டீசலுக்கும் இடையே வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது என்ற அளவில் செயற்கை  டீசல் உள்ளது.தவிர, இப்புது வகை டீசலானது கார் லாரி ஆகியவற்றின் எஞ்சின்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இ. கோலி (E Coli)  என்னும்   பாக்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன். இவற்றில் குறிப்பிட்ட வகை பாக்டீரியா  நமது அனைவர் உடலிலும் பெருங்குடலில் பெரும் எண்ணிக்கையில் உள்ளது. இது K2 என்னும் வைட்டமினைத் தயாரிக்க உதவுகிறது. அதே சமயத்தில் தீங்கு வகை விளைக்கும் இ.கோலி பாக்டீரியாவும் உள்ளது. இது குடி நீர் அல்லது உணவு மூலம் உடலுக்குள் சென்றால் வயிற்றுப் போக்கு போன்ற கோளாறை உண்டாக்கும் ஆராய்ச்சிக்கூடங்களிலும் இ.கோலி வகை பாக்டீரியாவை வளர்க்க முடியும். இந்த  பாக்டீரியாவில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம் செயற்கை டீசல் தயாரிக்கப்பட்டுள்ளது.



பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெய்:: விஞ்ஞானிகள் வெற்றி



 மனித கருமுளையத்தை மரபணு ரீதியில் மாற்றியமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முதல் தடவையாக வெற்றி பெற்றுள்ளனர். மேற்படி சர்ச்சைக்குரிய தொழில்நுட்பம் காரணமாக எதிர் காலத்தில் மரபணுக்களை மாற்றியமைத்து குழந்தைகளை விரும்பியவாறு உருவாக்குவது சாத்தியமாகும் என கூறப்படுகிறது. அமெரிக்க மஸாசுஸெட்ஸ் மாநிலத்திலுள்ள ஹவார்ட் மருத்துவ பாடசாலையை சேர்ந்த விஞ்ஞானிகளே இவ்வாறு கருமுளையத்தை மரபணு ரீதியில் மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்துள்ளனர்.
மனித கருப்பை இழையத்தை ஆய்வு கூடத்தில் மரபணு சீர்செய்தல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிலுள்ள பரம்பரை ரீதியாக மார்பு புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயை தோற்றுவிக்கும் 'பிரக் 1' மரபணுவை சீர்செய்யும் செயற்பாட்டில் மேற்படி விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த ஆய்வு முற்றுமுழுதாக தூய பரிசோதனை முயற்சியெனவும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட முட்டைகளை இன விருத்திக்கு பயன்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விரும்பியவாறு குழந்தைகளை உருவாக்கும் செயற்கிரமமானது மனித நெறிமுறைகளுக்கு புறம்பானது என அதன் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள்மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

 பூமியின் மேல்ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள்மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடந்த2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல்துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்தஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழுநடத்திய ஆய்வில் செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும் அதன்மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் தெரிந்து கொள்ளும் புதியமுறை கண்டறியப்பட்டது.நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதில் துல்லியமாகச் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் "பிளேட் பவுண்டரி அப்சர்வேஷன் சிஸ்டம்' மற்றும்ஜப்பானின் "ஜியோன்' ஆகிய அமைப்புகளுடன் இக்குழு இணைந்து செயல்படும். சீனாவில், 260 நிலையான கண்காணிப்பு மையங்கள் மற்றும் இரண்டாயிரம் பகுதிநேரக் கண்காணிப்பு மையங்கள் செயற்கைக்கோள் மூலம் தகவல்களைத் திரட்டித்தரும் பணியில் ஈடுபடுத்தப்படும். அதோடு, வானிலை முன்னறிவிப்புகளுக்காகவும், அறிவியல் ஆய்வுகளுக்காகவும்

No comments:

Post a Comment